உயிர்த்த ஞாயிறு-2020

உயித்தெழுந்த போது
கிறீஸ்து
முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்
தோமஸ்
திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்
கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான்

பூமியின் பாரம் குறையலானது
நாடு
முதியவர்களை
நாய்களைப் போல சாக விட்டது
சைரனும் சேமக்காலை மணியும்
ஒலிக்காத பொழுதுகளில்
இத்தாலியர்கள்
ஆளரவமற்ற தெருக்களை
இசையால் நிரப்பினார்கள்

கள்ளத் தீர்க்கதரிசிகள்
ஓடியொளித்த காலமொன்றில்
மருத்துவர்களே
சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள்

காற்றைப் பட்டங்கள் கைப்பற்றின
கடலை மீனினங்கள் கைப்பற்றின
வானத்தைப் பறவைகள் கைப்பற்றின
ஜலந்தரின்
மாசற்ற வானில்
இமயமலை
ஒரு நிலக்காட்சி ஓவியம் போல படர்ந்து கிடந்தது

கிறீஸ்து
மாஸ்க் இல்லாமல்
உயிர்த்தெழும் காலமொன்றுக்காக
பூத்திருக்கிறது கொன்றை

யாழ்ப்பாணம் – 12.04.2020

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Sally , 13/04/2020 @ 12:18 PM

    Please may I have a translation and the name of the person in Batti

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *